மேலும் அறிய
Top 10 News Headlines: விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஏற்பாட்டாளருக்கு 3 வருட சிறை, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today June 20: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து தப்போது பார்க்கலாம்.

11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
Source : ABP
- நான் முதல்வன் திட்டத்தால், JEE தேர்வில் தேச்சி பெற்று, சென்னை ஐஐடி-ல் பி.டெக் படிப்புக்கு தேர்வாகியுள்ள கீழடியைச் சேர்ந்த பாட்ஷாவின் படிப்பு செலவு மொத்தத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்க உள்ளது.
- ராசிபுரத்தில், நில மோசடி வழக்கில் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் கைது. 500-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.1,15,000 பெற்று மோசடி என புகார்.
- கோவையில், மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற குற்றத்தில், ரூ.3 லட்சம் சம்பளம் பெறும் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, தேஜஸ், செந்தூர், குருவாயூர், மன்னார்குடி உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு.
- கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
- விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது கர்நாடக அரசு.
- விவாகரத்து வழக்கில் மனைவியின் வாட்ஸ்-அப் சாட்டை ஆதாரமாக சமர்ப்பிக்கலாம் என மத்திய பிரதேச உயர்நிதிமன்றம் தீர்ப்பு.
- இந்தியா, பாகிஸ்தான் தலைவர்கள் பேசி மோதலை முடிவுக்கு கொண்டுவந்ததாக முதல் முறையாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டு, மத்தியஸ்த சர்ச்சைக்கு முடிவு கட்டினார்.
- இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது ஈரான். 200 ட்ரோன்கள், 450 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்.
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவெடுப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
- ஈரான், இஸ்ரேல் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர்களாக உயர்வு.
- வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா.
- இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை விண்வெளிக்கும் அனுப்பும், ஆக்சியம் 4 திட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்திய பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் 3 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இங்கிலாந்தின் ஹெடிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement